/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மண் கடத்தல்: ஊராட்சி தலைவி கணவர் உட்பட இருவர் கைது
/
மண் கடத்தல்: ஊராட்சி தலைவி கணவர் உட்பட இருவர் கைது
மண் கடத்தல்: ஊராட்சி தலைவி கணவர் உட்பட இருவர் கைது
மண் கடத்தல்: ஊராட்சி தலைவி கணவர் உட்பட இருவர் கைது
ADDED : பிப் 09, 2024 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:வடமணிப்பாக்கம் அடுத்த வடக்குப்புத்துார் ஏரியில் மண் கடத்துவதாக, நேற்று மதுராந்தகம் காவல் துறை துணை கண்காணிப் பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி அப்பகுதிக்குச் சென்ற போலீசார், மண் கடத்தலில் ஈடுபட்ட மண் ஏற்றிய லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
மண் கடத்தலில் ஈடுபட்ட எட்டிப்பட்டு பகுதியைச் சேர்ந்த மண் லாரி ஓட்டுனர் கண்ணன், 34, வடமணிப்பாக்கம் ஊராட்சி தலைவியின் கணவர் வடிவேல், 45, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.