ADDED : செப் 27, 2024 08:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த மணவாளன் மகள் மனோஜிதா, 20. கழிப்பட்டூர் தனியார் கல்லுாரியில், பி.டெக்., கெமிக்கல் இன்ஜியரிங் மூன்றாம் ஆண்டு படித்தார்.
கடந்த 26ம் தேதி, வீட்டில் உறங்கியபோது, காலை 4:45 மணிக்கு, அவரது இடதுகை நடுவிரலில் விஷ பூச்சி கடித்துள்ளது. மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி, அதேநாள் இரவு 11:00 மணிக்கு இறந்தார். இதுகுறித்து தந்தை, மாமல்லபுரம் போலீசில் நேற்று புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.