sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

டிராக்டர் கவிழ்ந்து விபத்து மாணவர் பலி; ஒருவர் காயம்

/

டிராக்டர் கவிழ்ந்து விபத்து மாணவர் பலி; ஒருவர் காயம்

டிராக்டர் கவிழ்ந்து விபத்து மாணவர் பலி; ஒருவர் காயம்

டிராக்டர் கவிழ்ந்து விபத்து மாணவர் பலி; ஒருவர் காயம்


ADDED : நவ 13, 2024 01:20 AM

Google News

ADDED : நவ 13, 2024 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த மதுார் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார், 30, டிராக்டர் ஓட்டுனர். நேற்று, அச்சிறுபாக்கம் மின் நிலையத்திலிருந்து, எலப்பாக்கம் பகுதிக்கு, ஆறு மின் கம்பங்களை, டிராக்டரில் ஏற்றிச் சென்றுள்ளார்.

அப்போது, அச்சிறுபாக்கம் மார்வர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் காட்டுக்கரணை கிராமத்தைச் சேர்ந்த அபிஷேக், 16, ரோஹித், 16, மற்றும் திம்மாபுரம் கிஷோர், 16, ஆகிய மூவரும், லிப்ட் கேட்டு, மின் கம்பம் ஏற்றி வந்த டிராக்டரில் அமர்ந்து வந்துள்ளனர்.

அப்போது, அச்சிறுபாக்கத்தில் இருந்து திம்மாபுரம் நோக்கி டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது, அதே மார்க்கத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக, டிராக்டர் வாகனத்தை சாலையோரம் வளைத்துள்ளார்.

இதில், சாலையோரம் இருந்த பள்ளத்தில், டிராக்டர் சக்கரம் இறங்கியதில், மின் கம்பங்கள் கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்து, மின் கம்பங்கள் ஒருபுறமாக சரிந்தன.

இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் மற்றும் டிப்பர், முட்புதரில் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், படுகாயம் அடைந்த அபிஷேக், ரோகித்தை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி, மாணவர் அபிஷேக் உயிரிழந்தார். டிராக்டர் ஓட்டுநர் அசோக்குமார், மேல்மருவத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவர் கிஷோர், சிறிய காயங்களுடன் அச்சிறுபாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அச்சிறுபாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us