sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பச்சையப்பன் கல்லுாரியை அரசே ஏற்று நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்

/

பச்சையப்பன் கல்லுாரியை அரசே ஏற்று நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்

பச்சையப்பன் கல்லுாரியை அரசே ஏற்று நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்

பச்சையப்பன் கல்லுாரியை அரசே ஏற்று நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்


ADDED : ஜன 27, 2025 11:08 PM

Google News

ADDED : ஜன 27, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை பச்சையப்பன் கல்லுாரியை அரசே ஏற்று நடத்தக்கோரி, அக்கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி சாலையில் பச்சையப்பன் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.

மாணவர்களின் செயல்பாடுகளில் தலையிடும், பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் பதவி விலக வேண்டும், கல்லுாரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 23ம் தேதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராடிய மாணவர்கள், கல்லுாரியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டிக்கும் விதமாக, கல்லுாரியின் பிரதான நுழைவாயிலில், மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவர்கள் சாலையில் அமர முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறியதாவது:

கல்லுாரியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. அமைதியான முறையில் போராடிய மாணவர்களை கல்லுாரி நிர்வாகம், சஸ்பெண்ட் செய்துள்ளது.

போராடும் மாணவர்களை கல்லுாரி நிர்வாகம் மிரட்டுகிறது. வசதிகள் செய்து தரக்கோரிய மாணவரின் கையை, முதல்வர் அலுவலக ஊழியர்கள் உடைத்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us