ADDED : டிச 10, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்,
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில், களப்பணியாளர்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும். சிறப்பு திட்டங்கள் வாயிலாக பெறப்படும் மனுக்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். நில எடுப்பு திட்டப் பணிகளில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட, 9 கோரிக்கைகள் முன்வைத்தனர்.