sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாலுகா ஆபீஸ் ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார்

/

தாலுகா ஆபீஸ் ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார்

தாலுகா ஆபீஸ் ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார்

தாலுகா ஆபீஸ் ஊழியர்கள் அலைக்கழிப்பதாக புகார்


ADDED : அக் 17, 2024 10:19 PM

Google News

ADDED : அக் 17, 2024 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் தாலுகா அலுவலகம் இயங்குகிறது. இங்கு, வருவாய், நில அளவை துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தாலுகா பகுதியினர், நிலம், வீட்டுமனைப் பட்டா பெறுவது, பட்டா பெயர் மாற்றம், பல வகை சான்றுகள் ஆகிய தேவைகளுக்காக, இணையவழியில் விண்ணப்பித்து வருகின்றனர்.

அது தொடர்பான விசாரணை, ஆவண சரிபார்ப்பு ஆகிய நடைமுறைகளுக்காக, விண்ணப்பதாரர்கள், தாலுகா அலுவலகம் செல்கின்றனர். அலுவலகத்தில் அலுவலர்களை சந்திக்க இயலாமல், அவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

விண்ணப்பதாரர்களை, தாலுகா அலுவலகம் வருமாறு, ஊழியர்கள் அழைக்கின்றனர். ஆனால், அவர்களோ தாமதமாக அலுவலகம் வருகின்றனர்.

பல மணி நேரம், அவரவர் இருக்கையில் இருப்பதும் இல்லை. இரண்டு ஊழியர்களிடம், ஏராளமான கோப்புகள் தேங்கியிருப்பதை, அதிகாரிகள் ஆய்வு செய்து அறியலாம்.

பல மணி நேரம் காத்திருந்தும், எங்கள் பணி முடிக்கப்படாமல், ஏமாற்றத்துடன் திரும்புகிறோம். உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us