sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

500 பேட்டரி பேருந்துகள் சென்னையில் இயக்க டெண்டர்

/

500 பேட்டரி பேருந்துகள் சென்னையில் இயக்க டெண்டர்

500 பேட்டரி பேருந்துகள் சென்னையில் இயக்க டெண்டர்

500 பேட்டரி பேருந்துகள் சென்னையில் இயக்க டெண்டர்


ADDED : பிப் 25, 2024 02:22 AM

Google News

ADDED : பிப் 25, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில் 500 பேட்டரி பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் 3,454 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் 30.50 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. இருப்பினும், போதிய அளவில் பேருந்துகள் இயக்காததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறந்துள்ளதால், கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய பேருந்துகளை வாங்குவதற்கு, மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறது.

அடுத்தக்கட்டமாக, 500 பேட்டரி பேருந்துகளை இயக்கவும், மாநகர போக்குவரத்து கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால், பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது. தற்போது 3,400 மாநகர பேருந்துகளையும் முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பயணியரின் தேவையை போக்க, கூடுதல் பேருந்துகள் வாங்குவது, மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் தனியார் பேருந்துகளை இயக்க பர்மிட் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

புதிதாக பேட்டரி பேருந்துகள் வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, 100 பேட்டரி பேருந்துகளுக்கு டெண்டர் வெளியிடப்பட்டது.

தற்போது, மேலும் 500 பேட்டரி பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளோம். இதற்கான, முழு விபரங்கள் அடுத்த சில நாளில் வெளியிடப்படும்.

பேட்டரி சார்ஜிங் மையங்களை முக்கிய பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அமைக்க உள்ளோம். பேட்டரி பேருந்துகளை தனியார் பங்களிப்போடு இயக்க உள்ளோம்.

பேருந்து இயக்கம், பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ளும். அடுத்த சில மாதங்களில் புதிய பேருந்துகள் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us