/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
ADDED : நவ 07, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி அஞ்சலி, 47. சோழிங்கநல்லுார் பகுதி தனியார் நிறுவன ஹவுஸ் கீப்பிங் ஊழியர்.
நேற்று முன்தினம் பணிக்குச் சென்று, நேற்று காலை 8:00 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தார்.
வீட்டினுள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த ஐந்து சவரன் நகை, 20,000 ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.