sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காஞ்சியில் கிடைத்த 16 சிலைகள் மூன்றாண்டாக நீடிக்குது மர்மம்

/

காஞ்சியில் கிடைத்த 16 சிலைகள் மூன்றாண்டாக நீடிக்குது மர்மம்

காஞ்சியில் கிடைத்த 16 சிலைகள் மூன்றாண்டாக நீடிக்குது மர்மம்

காஞ்சியில் கிடைத்த 16 சிலைகள் மூன்றாண்டாக நீடிக்குது மர்மம்


ADDED : டிச 31, 2024 01:07 AM

Google News

ADDED : டிச 31, 2024 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,ஏகாம்பரநாதர் கோவில் நகை பாதுகாப்பு அறையில், எந்த ஆவணங்களும் இன்றி கிடைத்த 16 சிலைகள் குறித்த மர்மம், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்கிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 2020 அக்டோபரில் நடந்த நகை சரிபார்ப்பு பணியின்போது, கோவில் நகை அறையில், உலோகத்திலான சண்டிகேஸ்வரர், மாரியம்மன், இளையான்குடி நாயனார் உட்பட, 16 சுவாமி சிலைகள் மற்றும் ஒரு திருவாச்சி இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள் ஆய்வு செய்ததில், அவை பற்றிய எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது.

சிலைகளை புகைப்படம் எடுத்து, அவற்றின் விபரம் மற்றும் அறிக்கையை, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, அப்போதைய கோவில் செயல் அலுவலர் அனுப்பி வைத்தார்.

அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவிலில், 16 உலோக சிலைகள் மற்றும் ஒரு திருவாச்சி ஆகியவை இருந்தன. தொழில்நுட்ப அலுவலர், நுண்ணறிவு தொழில்நுட்ப அலுவலர், அறநிலையத் துறை சரக ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டு, எடை போட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகள் கோவில் நகை அறைக்குள் வந்தது குறித்து, எந்த விபரமும் அறிய முடியவில்லை. இக்கோவிலில், நீண்டகாலமாக வழிபாட்டில் உள்ள, 105 சிலைகள் மட்டுமே, தொல்பொருள் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு புகைப்படங்களை அனுப்பி, அவர்கள் ஆய்வு செய்து பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆய்வு மேற்கொள்ளும் வரை, கோவிலிலேயே சிலைகள் பாதுகாப்பாக வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த விவகாரம் வெளியே தெரிந்தபின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலில் ஆய்வு நடத்தினர். இது தொடர்பாக, வெங்கட்ராமன் என்பவர் அளித்த புகாரின்படி, 12 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மூன்று ஆண்டுகளாகியும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

'இந்த விவகாரத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தீவிர விசாரணை நடத்தினால் மட்டுமே, சிலைகள் எங்கிருந்து, யார் வாயிலாக ஏகாம்பரநாதர் கோவிலுக்குள் வந்தது குறித்து அறிந்து கொள்ள முடியும். மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையும் ஆய்வு நடத்தவில்லை' என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., சிவகுமாரிடம் கேட்டபோது, “ஐ.ஜி.,யிடம் இதுபற்றி கேட்டுவிட்டு பின் தெரிவிக்கிறேன்,” என்றார்.

சிலைகள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதுபற்றி வேறு எதுவும் தெரிவிக்க இயலாது. போலீசார் கேட்கும் விபரங்களை நாங்கள் அளிக்கிறோம்.

- முத்துலட்சுமி,

ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர்,

காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us