sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பேருந்து நீட்டித்து இயக்க கிராமவாசிகள் காத்திருப்பு

/

பேருந்து நீட்டித்து இயக்க கிராமவாசிகள் காத்திருப்பு

பேருந்து நீட்டித்து இயக்க கிராமவாசிகள் காத்திருப்பு

பேருந்து நீட்டித்து இயக்க கிராமவாசிகள் காத்திருப்பு


ADDED : அக் 27, 2024 08:03 PM

Google News

ADDED : அக் 27, 2024 08:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம் கரும்பாக்கம் கிராமத்திற்கு, தாம்பரத்தில் இருந்து, தடம் எண்: 55சி என்ற அரசு பேருந்து மேலையூர், வெங்கூர் வழியாக, 20 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது.

அதேபோல், தாம்பரத்தில் இருந்து தடம் எண்: 55ஆர் என்ற பேருந்து, கொட்டமேடு வழியாக கரும்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய பாலூர் கிராமத்திற்கு இயக்கப்பட்டது.

ஆனால், இரண்டு ஆண்டுகளாக, 55சி என்ற பேருந்து வெங்கூர் வரையும், 55ஆர் என்ற பேருந்து கொட்டமேடு வரை மட்டுமே இயக்கப்படுகிறது. 2 - 3 கி.மீ., தூரமுள்ள கரும்பாக்கம், பாலூர் கிராமத்திற்கு இயக்கப்படவில்லை.

எனவே, கரும்பாக்கம், பாலூர் கிராமம் வரை மீண்டும் இரு பேருந்துகளை நீட்டித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

கரும்பாக்கம் கிராமத்தில், 2,000க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயமே பிரதான தொழில். பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்து சென்று விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

மேலும், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பேருந்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us