/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
/
தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
ADDED : நவ 23, 2024 08:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் பிரணவமலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு பைரவருக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதுபோன்று, சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில், பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.