sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

முழுநேர நூலகமாக தரம் உயர்த்த திருப்போரூர் வாசகர்கள் காத்திருப்பு

/

முழுநேர நூலகமாக தரம் உயர்த்த திருப்போரூர் வாசகர்கள் காத்திருப்பு

முழுநேர நூலகமாக தரம் உயர்த்த திருப்போரூர் வாசகர்கள் காத்திருப்பு

முழுநேர நூலகமாக தரம் உயர்த்த திருப்போரூர் வாசகர்கள் காத்திருப்பு


ADDED : நவ 23, 2024 08:15 PM

Google News

ADDED : நவ 23, 2024 08:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் கிளை நூலகம், முழுநேர நூலகமாக தரம் உயர்த்த வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் கிளை நுாலகம், 1959ல் துவக்கப்பட்டது. இதில், 3,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். 30,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

மாணவர்கள், வாசகர்கள் என, தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து படிக்கின்றனர். காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை இயங்குகிறது.

கடந்த 2012ம் ஆண்டு திருப்போரூர் தாலுகாவாக மாற்றப்பட்டு, தற்போது 10 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், இந்த நூலகம் இன்னும் கிளை நூலகமாகவே செயல்பட்டு வருகிறது.

எனினும், திருப்போரூர் கிளை நூலகத்தை முழுநேர நூலகமாக தரம் உயர்த்த வேண்டும் என, வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு தரம் உயர்த்தப்பட்டால், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும்.

மேலும், கூடுதலாக நூலகர்கள் நியமிக்கப்படுவர். செய்தித்தாள், புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாரோவர் மற்றும் வேலை தேடுவோர் உள்ளிட்டோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us