/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தார்பாய் மூடாமல் செல்லும் டிப்பர் லாரிகளால் ஆபத்து
/
தார்பாய் மூடாமல் செல்லும் டிப்பர் லாரிகளால் ஆபத்து
தார்பாய் மூடாமல் செல்லும் டிப்பர் லாரிகளால் ஆபத்து
தார்பாய் மூடாமல் செல்லும் டிப்பர் லாரிகளால் ஆபத்து
ADDED : அக் 14, 2024 03:59 AM

சித்தாமூர்:சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளான சரவம்பாக்கம், தொன்னாடு, மழுவங்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல் குவாரிகள் செயல்படுகின்றன.
கல் குவாரிகளில் இருந்து லாரிகள் வாயிலாக, கிராவல் மண், ஜல்லி, 'எம்- - சாண்ட், பி - சாண்ட்', கருங்கற்கள் போன்றவை கட்டுமானப் பணிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
பெரும்பாலான லாரிகள், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பொருட்களை ஏற்றிச்செல்வதால், லாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறி, பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மேலும், லாரிகளில் கிராவல் மண், எம் - -சாண்ட் போன்றவற்றை எடுத்து செல்லும்போது, தார்பாய் போட்டு மூடாமல் செல்வதால், மண் துகள்கள் காற்றில் பறந்து, பின் தொடர்ந்து செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை, பாறைத் துகள்கள் பதம் பார்க்கின்றன.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் மற்றும் தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.