/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொலை வழக்கு இருவருக்கு குண்டாஸ்
/
கொலை வழக்கு இருவருக்கு குண்டாஸ்
ADDED : ஜன 07, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் : கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பத்தைச் சேர்ந்த சோமு என்கிற சோமசுந்தரமூர்த்தி, 30, ஒத்திவாக்கத்தைச் சேர்ந்த சுனில் என்கிற சுதர்சனம், 20, ஆகியோரை, வேங்கடமங்கலம் ஊராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் அன்பரசு, 27, கொலை வழக்கில், காயார் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மேற்கண்ட இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்.பி., சாய் பிரணீத், கலெக்டர் ராகுல்நாத்துக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகலை, புழல் சிறையில் உள்ள அவர்களிடம், நேற்று முன்தினம் போலீசார் வழங்கினர்.