sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு முதியோர் இருவருக்கு 'ஆயுள்'

/

 சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு முதியோர் இருவருக்கு 'ஆயுள்'

 சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு முதியோர் இருவருக்கு 'ஆயுள்'

 சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு முதியோர் இருவருக்கு 'ஆயுள்'


ADDED : நவ 21, 2025 03:12 AM

Google News

ADDED : நவ 21, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், முதியவர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், தீர்ப்பளித்தது.

சென்னை, சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பெற்றோருடன் 6 வயது சிறுமி வசித்து வந்தார். பெற்றோர் பிரிந்து, தாய் வேறு திருமணம் செய்துகொண்டதால் தாத்தா, பாட்டி வீட்டில் சிறுமி வசித்து வருகிறாள்.

கடந்த 2022ம் ஆண்டு, சிறுமி தெருவில் விளையாடிய போது, மாவுக்காரர் ராஜேந்திரன், 63, வாட்ச்காரர் தேவராஜ், 60, ஆகிய இருவர், சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதுகுறித்து சிறுமி தன் தாத்தாவிடம் கூற, சோமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவர்கள் இருவரையும், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடைபெற்று வந்தது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் ராஜேந்திரன், தேவராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்தும், கட்டத்தவறினால், ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி நசீமாபானு, நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாய் வழங்க, அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us