/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகரில் இரு பூங்காக்கள் மழைநீர் தேங்கி வீணாகும் அவலம்
/
மறைமலை நகரில் இரு பூங்காக்கள் மழைநீர் தேங்கி வீணாகும் அவலம்
மறைமலை நகரில் இரு பூங்காக்கள் மழைநீர் தேங்கி வீணாகும் அவலம்
மறைமலை நகரில் இரு பூங்காக்கள் மழைநீர் தேங்கி வீணாகும் அவலம்
ADDED : டிச 06, 2025 06:02 AM

மறைமலை நகர்: மறைமலை நகரில், தலா 48 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட இரு பூங்காக்களில் தண்ணீர் தேங்கி, விளையாட்டு உபகரணங்கள் வீணாகி வருகின்றன.
மறைமலை நகர் நகராட்சி, 20வது வார்டில் உள்ள ஸ்ரீவாரி நகரில், நகராட்சி சார்பில் மூன்று ஆண்டுகளுக்கு முன், 48 லட்சம் ரூபாய் மதிப்பில், அண்ணா பூங்கா அமைக்கப்பட்டது.
இதில் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், மின் விளக்குகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டன.
இந்த பூங்காவிற்கு அடுத்து 100 மீட்டர் துாரத்தில், 48 லட்சம் ரூபாயில் மற்றொரு பூங்காவும் அமைக்கப்பட்டு, மேற்கண்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
ஆனால், இந்த இரு பூங்காக்களும் முறையான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டதால், தற்போது மழைநீர் தேங்கி வீணாகி வருகின்றன.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
வளர்ந்து வரும் பகுதியான மறைமலை நகர், ஸ்ரீவாரி நகரில், தற்போது புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தலா 48 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த பூங்காக்கள் திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டதால், தற்போது பூங்காவில் தண்ணீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக, செங்குன்றம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், இந்த வழியாக செல்வதால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள உபகரணங்கள் வீணாகி வருகின்றன.
இந்த வகையில், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காங்களை சீரமைத்து மேம்படுத்த, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

