sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தரமில்லாத புதிய தார்ச்சாலை ஊனமலை கிராமத்தினர் அதிர்ச்சி

/

தரமில்லாத புதிய தார்ச்சாலை ஊனமலை கிராமத்தினர் அதிர்ச்சி

தரமில்லாத புதிய தார்ச்சாலை ஊனமலை கிராமத்தினர் அதிர்ச்சி

தரமில்லாத புதிய தார்ச்சாலை ஊனமலை கிராமத்தினர் அதிர்ச்சி


ADDED : ஜன 08, 2025 10:11 PM

Google News

ADDED : ஜன 08, 2025 10:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது, ஊனமலை ஊராட்சி.

இங்கு, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, ஊனமலை வழியாக முனியந்தாங்கல் வரை செல்லும் பிரதான சாலை உள்ளது.

இந்த சாலையை 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜல்லி கற்கள் பெயர்ந்து, மிகவும் மோசமான நிலையில் இந்த சாலை இருந்தது. இந்நிலையில், பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 68.16 லட்சம் ரூபாய் மதிப்பில், சமீபத்தில் இது தார்ச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், தரமற்ற நிலையில் இந்த சாலை உள்ளதால், பகுதிவாசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக, மண்ணின் மேல் தார் கலவையை பரப்பியது போல், இந்த சாலை உள்ளது. கைகளில் பெயர்த்து எடுக்கும் அளவுக்கு இச்சாலை உள்ளதால், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சேதமடைந்து விடும் எனக் கூறப்படுகிறது.

எனவே, கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us