sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குரங்கு தப்பித்த அதிர்ச்சியில் வண்டலுார் பெண் ஊழியர் பலி

/

குரங்கு தப்பித்த அதிர்ச்சியில் வண்டலுார் பெண் ஊழியர் பலி

குரங்கு தப்பித்த அதிர்ச்சியில் வண்டலுார் பெண் ஊழியர் பலி

குரங்கு தப்பித்த அதிர்ச்சியில் வண்டலுார் பெண் ஊழியர் பலி


ADDED : பிப் 14, 2024 11:33 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து, 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டன. இதில், இரண்டு குரங்குகள் நேற்று முன்தினம் காலை, உணவு வைக்கும் போது, கூண்டில் இருந்து தப்பித்து காட்டுப்பகுதிக்கு சென்றன.

அப்போது, ஜான் என்ற நிரந்த ஊழியரும், சுகுணா, 45, என்ற தற்காலிக பெண் ஊழியரும் பணியில் இருந்தனர். இரண்டு நாட்களாகியும், குரங்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த சுகுணா, உணவு அருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்தார். செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சுகுணா இறந்தது தெரியவந்தது.

இச்சம்பவம், பூங்கா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூங்கா அதிகாரிகள், டார்ச்சர் செய்ததாலேயே மன உளைச்சல் ஏற்பட்டு இறந்ததாக, பூங்கா வட்டாரத்தில் கூறப்படுகிறது. சுகுணா, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு, ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இன்சூரன்ஸ் தொகையை பெற்று தர பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தற்காலிக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us