sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் நிழற்குடை எப்போது பயன்பாட்டிற்கு வரும்

/

செங்கையில் நிழற்குடை எப்போது பயன்பாட்டிற்கு வரும்

செங்கையில் நிழற்குடை எப்போது பயன்பாட்டிற்கு வரும்

செங்கையில் நிழற்குடை எப்போது பயன்பாட்டிற்கு வரும்


ADDED : டிச 29, 2024 01:49 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில், பயணியர் நிழற்குடை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு, மாவட்டம் முழுதும் இருந்து, பல்வேறு தேவைக்காக, கிராமவாசிகள் மற்றும் நகரவாசிகள் வந்து செல்கின்றனர். இங்கு, பேருந்து நிறுத்தம் இடத்தில், பயணியர் நிழற்குடை இல்லாததால், மழை மற்றும் வெயிலில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நிழற்குடை அமைக்க, கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

அதன்பின், செங்கல்பட்டு தி.மு.க.., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, தொகுதி மேம்பாட்டு நிதி 2023 - 24ம் ஆண்டில், கலெக்டர் அலுவலகம் பகுதியில், இருபுறமும் நிழற்குடை கட்ட 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இப்பணியை செயல்படுத்த, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். பயணிகள் நிழற்குடை கட்ட டெண்டர் விடப்பட்டு, செப்டம்பர் மாதம் பணிகள் துவங்கி, பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன.

நிழற்குடை திறக்கப்படாததால், குடிமகன்கள் குடிமையமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி, நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us