/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேலை வாய்ப்பு முகாமில் 126 பேருக்கு பணி ஆணை
/
வேலை வாய்ப்பு முகாமில் 126 பேருக்கு பணி ஆணை
ADDED : செப் 21, 2024 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய, சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், நேற்று நடந்தது.
இந்த முகாமில், 49 தனியார் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் பங்கேற்று, 437 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 13 பேரிடம், நேர்முகத் தேர்வு நடத்தினர்.
இதில், 54 ஆண்கள், 72 பெண்கள் என, 126 பேரும், மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி ஆணையை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தணிகைவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.