/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது
/
கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது
ADDED : நவ 27, 2024 09:44 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வல்லம் மிஷன் தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார் என்கிற தினேஷ், 28, என்பவர், அதே பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அவரை மடக்கிப்பிடித்து, இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேஷ்குமாரை கைது செய்து, கடந்த அக்., மாதம் சிறையில் அடைத்தனர்.
அதன்பின், அவரை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு எஸ்.பி., சாய் பிரணீத் பரிந்துரை செய்தார். இதையேற்று, தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அருண்ராஜ் நேற்று உத்தரவிட்டார்.
அதன்பின், புழல் சிறையில் உள்ள அவரிடம், குண்டர் சட்ட நகலை போலீசார் வழங்கினர்.