sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது

/

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது


ADDED : அக் 15, 2025 10:17 PM

Google News

ADDED : அக் 15, 2025 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சி, சாத்தங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா. 30, இவர், அதே பகுதி தனியார் பல் மருத்துவ மனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிகிறார். நேற்று மதியம் 2:00 மணிக்கு சாப்பிட வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது, வாலிபர் ஒருவர் ஷர்மிளாவை பின் தொடர்ந்து வந்து, அவர் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறிக்க முயன்றார்.

அப்போது, அவர் கூச்சலிட்டதும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து வாலிபரை பிடித்து கேளம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், திருப்போரூர் பகுதியை சேர்ந்த உதயகுமார், 36 என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us