sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தனியார் சொகுசு பேருந்து மோதி இளைஞர் பலி

/

தனியார் சொகுசு பேருந்து மோதி இளைஞர் பலி

தனியார் சொகுசு பேருந்து மோதி இளைஞர் பலி

தனியார் சொகுசு பேருந்து மோதி இளைஞர் பலி


ADDED : அக் 02, 2024 08:31 PM

Google News

ADDED : அக் 02, 2024 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டையைச் சேர்ந்தவர் நடராஜ் என்கிற அஜித், 29. இவர், செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 11:45 மணிக்கு, வேலைக்கு செல்வதற்காக, ஹீரோ ஹோண்டா ஷைன் இரு சக்கர வாகனத்தில், கக்கிலப்பேட்டை நோக்கி வந்துள்ளார்.

அப்போது, கக்கிலப்பேட்டை பகுதியில், சென்னை மார்க்கத்தில் செல்வதற்காக, தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். எதிர்பாராதவிதமாக, திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற, வின் தனியார் சொகுசு பேருந்து, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக மோதியது.

இதில், நடராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார், நடராஜ் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று உடல் நடராஜின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின், வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவான பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us