ADDED : மார் 18, 2024 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம், : மாமண்டூர் அருகே தனியார் திரையரங்கம் எதிரே, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று திண்டிவனம் மார்க்கத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், இளைஞர் உடலைக் கைப்பற்றி, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார், பலியானவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

