sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

15 - 1+6 = 20 6 புது மண்டலங்கள் சென்னை மாநகராட்சியில் உதயம் சென்னை மாநகராட்சியில் 6 புது மண்டலங்கள் உதயம்

/

15 - 1+6 = 20 6 புது மண்டலங்கள் சென்னை மாநகராட்சியில் உதயம் சென்னை மாநகராட்சியில் 6 புது மண்டலங்கள் உதயம்

15 - 1+6 = 20 6 புது மண்டலங்கள் சென்னை மாநகராட்சியில் உதயம் சென்னை மாநகராட்சியில் 6 புது மண்டலங்கள் உதயம்

15 - 1+6 = 20 6 புது மண்டலங்கள் சென்னை மாநகராட்சியில் உதயம் சென்னை மாநகராட்சியில் 6 புது மண்டலங்கள் உதயம்


ADDED : மார் 02, 2025 12:52 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிர்வாக பகுதிகளை சீரமைத்து, மண்டலங்களின் எண்ணிக்கையை, 15ல் இருந்து 20 ஆக உயர்த்தி, நேற்று முன்தினம் அரசாணை வெளியிடப்பட்டது.

நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், 174 சதுர கி.மீ., பரப்பில், 10 மண்டலம், 155 வார்டுகளுடன் செயல்பட்ட சென்னை மாநகராட்சியில், புறநகரின் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகள் 2011ல் இணைக்கப்பட்டன.

இதனால், 426 சதுர கி.மீ., பரப்பிற்கு, சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவடைந்தது. இதனால், 200 வார்டுகள், 15 மண்டலங்களாக எண்ணிக்கை உயர்ந்தது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, எல்லையில் 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆனால், 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே, சென்னை மாவட்டத்தில் உள்ளன.

மற்ற சட்டசபை தொகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன. மேலும், மாநகராட்சி மண்டலத்தின் நிர்வாக எல்லைகளும், சட்டசபை தொகுதிகளின் எல்லைகளும், ஒருசேர அமையவில்லை.

இதன் காரணமாக, பல்வேறு நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. எனவே, மக்கள் தொகை அதிகரிப்பு, துரித சேவை, நிர்வாக வசதி போன்ற காரணங்களால், சட்டசபை தொகுதி வாரியாக மண்டலங்கள் பிரிக்கப்படும் என, சட்டசபையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, 2022ல் அறிக்கை வெளியிட்டார்.

அதன்பின், மண்டலங்கள் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. முதலில், 24 மண்டலங்களாக உயர்த்த, அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது. மேலும், புறநகர் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்து, வார்டு எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆலோசனை நடந்தது.

ஆனால், தொடர்ந்து மாநகராட்சி எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டால், நிர்வாக சிக்கல் ஏற்படும் என, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பின், சென்னை மாநகராட்சியின் மண்டலங்களை, 20 ஆக விரிவாக்கம் செய்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே இருந்த திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், அம்பத்துார், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களும், அந்தந்த சட்டசபை தொகுதிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

கொளத்துார், வில்லிவாக்கம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, தி.நகர், விருகம்பாக்கம், பெருங்குடி - சோழிங்கநல்லுார் ஆகிய ஆறு மண்டலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன.

தற்போது இருக்கும் மணலி மண்டலம், சட்டசபை தொகுதியாக இல்லாததாலும், மூன்று சட்டசபை தொகுதிக்குள் வருவதாலும், அம்மண்டலம் திருவொற்றியூர் மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

என்ன சிறப்பு?

தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளை கருத்தில் வைத்து, மாநகராட்சியின் நிர்வாக எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும், அடிப்படை வசதிகளை சீராக வழங்க வசதியாக இருக்கும்.



வளர்ச்சிக்கு

உதவும்இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:தற்போது இருக்கும் மாநகராட்சி மண்டலங்கள், இரண்டு மூன்று சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதனால், சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணி, அம்மண்டலத்திற்கு முழுமையாக செல்ல முடியாத நிலையும், அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி பெறுவதில் பல்வேறு சிக்கல்களும் இருந்தன. சட்டசபை தொகுதி வாரியாக விரிவாக்கம் செய்வதால், அடிப்படை வசதிகள் முதல் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



வளர்ச்சிக்கு

உதவும்இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:தற்போது இருக்கும் மாநகராட்சி மண்டலங்கள், இரண்டு மூன்று சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதனால், சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணி, அம்மண்டலத்திற்கு முழுமையாக செல்ல முடியாத நிலையும், அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி பெறுவதில் பல்வேறு சிக்கல்களும் இருந்தன. சட்டசபை தொகுதி வாரியாக விரிவாக்கம் செய்வதால், அடிப்படை வசதிகள் முதல் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us