sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐ.டி., ஊழியரை வெட்டிய 2 ரவுடிகளுக்கு மாவு கட்டு

/

ஐ.டி., ஊழியரை வெட்டிய 2 ரவுடிகளுக்கு மாவு கட்டு

ஐ.டி., ஊழியரை வெட்டிய 2 ரவுடிகளுக்கு மாவு கட்டு

ஐ.டி., ஊழியரை வெட்டிய 2 ரவுடிகளுக்கு மாவு கட்டு


ADDED : ஆக 02, 2024 12:46 AM

Google News

ADDED : ஆக 02, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணகி நகர், கண்ணகி நகரை சேர்ந்தவர் லாரன்ஸ், 24. ஐ.டி., ஊழியர். சில மாதங்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், 30 என்பவர், போதையில் லாரன்சுடன் தகராறு செய்தார். அப்பகுதிமக்கள் சமரசம் செய்து அனுப்பினர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் சரவணன் உள்ளிட்ட ஆறு பேர் சேர்ந்து, லாரன்ஸை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், அவரின் கை எலும்பு துண்டானது. பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கண்ணகி நகர் போலீசார், நேற்று தாக்குதல் நடத்திய சரவணன் அவரின் தம்பி அந்தோணி ராஜ், 23, சூர்யா, 23, சிவகுமார், 27, சந்தோஷ், 20, ஆகியோரை கண்ணகி நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இவர்களில் சரவணன், அந்தோணி ராஜ் ஆகியோர் போலீசாரிடம் தப்பிச் செல்ல முயன்று வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில், சரவணனின் காலிலும், அந்தோணி ராஜின் கையிலும் முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் மாவு கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில், சரவணன், அந்தோணி ராஜ், சூர்யா, சிவகுமார் உள்ளிட்டோர் மீது பல வழக்குகள் உள்ளன. தப்பி ஓடிய சூர்யா 24, என்ற மற்றொரு நபரை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us