ADDED : ஆக 21, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி, பூந்தமல்லி, கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் புளோரா, 55; போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக உள்ளார்.
நேற்று காலை, பணிக்கு செல்ல, வீட்டில் இருந்து பூந்தமல்லி கல்லறை பேருந்து நிறுத்தம் பகுதிக்கு நடந்து சென்றார்.
அப்போது, ஒரு பைக்கில் வந்த இருவர், புளோரா கழுத்தில் இருந்த ஆறு சவரன் செயினை பறித்து தப்பினர். பூந்தமல்லி போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடுகின்றனர்.