sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு திட்டத்தில் 'புரோக்கர்' தலையிட்டால் புகார் தரலாம்

/

அரசு திட்டத்தில் 'புரோக்கர்' தலையிட்டால் புகார் தரலாம்

அரசு திட்டத்தில் 'புரோக்கர்' தலையிட்டால் புகார் தரலாம்

அரசு திட்டத்தில் 'புரோக்கர்' தலையிட்டால் புகார் தரலாம்


ADDED : ஜூன் 22, 2024 12:35 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ''அரசின், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்தில், 'புரோக்கர்கள்' செயல்பாடுகள் இருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்கிறேன் அல்லது பெற்றுத் தருகிறேன் எனச் சொல்லி தனி நபரோ, சங்கங்களோ, நிறுவனங்களோ பணம் அல்லது வேறு வகையில் ஆதாயம் பெறும் நோக்கில் செயல்பட்டால், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக புகார் அளிக்கலாம்.

புகார்களை, 044- 2999 3612 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us