sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்

/

கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்

கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்

கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்


ADDED : ஆக 17, 2024 12:26 AM

Google News

ADDED : ஆக 17, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலையரசி, 31. இவர், தாம்பரம் அருகே முடிச்சூரில் தங்கி கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

அதே இடத்தில் பணியாற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஷ்வா, 32, என்பவருடன் கலையரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கலையரசியிடம் இருந்து விஷ்வா 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அந்த பணத்தை நீண்ட நாட்களாக திருப்பி தராததால், அதை கலையரசி திரும்பக் கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், விஷ்வா, அவரது மனைவி வெண்ணிலா, 28, இவர்களது நண்பர்கள் சஞ்சய், 22, முகமது ஆசிப், 23, ஆகியோர் இணைந்து, கலையரசியை சில தினங்களுக்கு முன்பு சோமங்கலம் அருகே எட்டியாபுரம் பகுதிக்கு வரவழைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அங்கிருந்து தப்பியோடி அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைந்த கலையரசி, காவல் துறை கட்டுப்பாட்டு அறை 100 தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

விரைந்து வந்த போலீசார் கலையரசியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த வழக்கில் தாக்குதல் நடத்திய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us