/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிராட்வே பஸ் நிலையம் இடிப்பு பணி 288 கடைகளை காலி செய்ய 'நோட்டீஸ்'
/
பிராட்வே பஸ் நிலையம் இடிப்பு பணி 288 கடைகளை காலி செய்ய 'நோட்டீஸ்'
பிராட்வே பஸ் நிலையம் இடிப்பு பணி 288 கடைகளை காலி செய்ய 'நோட்டீஸ்'
பிராட்வே பஸ் நிலையம் இடிப்பு பணி 288 கடைகளை காலி செய்ய 'நோட்டீஸ்'
ADDED : பிப் 25, 2025 01:02 AM
பிராட்வே, பிராட்வே பேருந்து நிலையம், முறையான பராமரிப்பின்றி படுமோசமாக காட்சியளித்தது. பயணியரின் கோரிக்கையை அடுத்து, அதிநவீன வசதிகளுடன், 822.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த பிராட்வே பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது.
இதையடுத்து, ராயபுரம் மேம்பாலம் அருகில் உள்ள 3 ஏக்கர் பரப்பில், துறைமுகத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காலி இடத்தில், 7 கோடி ரூபாய் செலவில், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்கி நடக்கின்றன.
அடுத்த மாதம், பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட உள்ள நிலையில், பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள டிபன் கடைகள், பேக்கரி, பிரியாணி கடைகள் உள்ளிட்ட 288 கடைகளின் உரிமையாளர்களிடம், இம்மாத இறுதிக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என, மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.
இதில், 179 கடைகளுக்கு என்.எஸ்.சி.போஸ் சாலையிலும், 31 கடைகளுக்கு பிராட்வே, ரத்தன் பஜாரிலும், 22 கடைகள் பிராட்வே, ஈவ்னிங் பஜாரிலும், 56 கடைகள் பிரகாசம் சாலை, ஸ்ரீராமலு பார்க்கிலும் கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஓரிரு மாதங்களில் இந்த கடைகளின் கட்டுமான பணி முடிவடைய உள்ள நிலையில், பின் கடை உரிமையாளர்களுக்கு கடைகள் ஒப்படைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.