sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லோடுவேன் மீது மோதிய பஸ் ஓட்டுனர் பலி; ஐவர் படுகாயம்

/

லோடுவேன் மீது மோதிய பஸ் ஓட்டுனர் பலி; ஐவர் படுகாயம்

லோடுவேன் மீது மோதிய பஸ் ஓட்டுனர் பலி; ஐவர் படுகாயம்

லோடுவேன் மீது மோதிய பஸ் ஓட்டுனர் பலி; ஐவர் படுகாயம்


ADDED : ஆக 29, 2024 12:18 AM

Google News

ADDED : ஆக 29, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த ஒரகடம் அருகே, மேட்டுப்பாளையம் கிராமத்தில், தொழிற்சாலைகளுக்கு உணவு அளிக்கும் தனியார் 'கேன்டீன்' இயங்கி வருகிறது.

நேற்று அதிகாலை, கேன்டீனுக்கு சொந்தமான 'டாடா ஏஸ்' லோடுவேனில், 6 ஊழியர்களை ஏற்றிக் கொண்டு, ஸ்ரீபெரும்புதுார் - - சிங்கபெருமாள் கோவில் சாலை வழியே மேட்டுப்பாளையம் சென்றனர்.

வாகனத்தை, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜன்டு மண்டல், 23, என்பவர் ஓட்டினர்.

மாத்துார் துணை மின் நிலையம் அருகே, மேட்டுப்பாளையம் சந்திப்பில் நின்ற போது, பின்னால் வந்த லாரி ஒன்று, லோடுவேனில் மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த லோடுவேன், மறுபுறம் சாலையில் நகர்ந்து சென்ற போது, ஒரகடத்தில் இருந்து வந்த தனியார் நிறுவன பேருந்து மோதியது.

இந்த விபத்தில், லோடுவேன் டிரைவர் ஜன்டு மண்டல், சம்பவ இடத்திலேயே பலியானார்.

வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருந்த 5 ஊழியர்களுக்கு தலை, உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

தகவலின்படி வந்த ஒரகடம் போலீசார், காயமடைந்தோரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பலியான ஜன்டு மண்டலின் உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுனரை பிடித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us