/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அத்திப்பட்டு நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
/
அத்திப்பட்டு நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
ADDED : ஜூலை 06, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 600 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின்சாரம், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது. வட சென்னை விரிவாக்க மின் நிலைய முதல் அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் இரவு 9:20 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.