sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆவடியில் டெங்கு 6 பேர் ' அட்மிட் '

/

ஆவடியில் டெங்கு 6 பேர் ' அட்மிட் '

ஆவடியில் டெங்கு 6 பேர் ' அட்மிட் '

ஆவடியில் டெங்கு 6 பேர் ' அட்மிட் '


ADDED : ஆக 25, 2024 12:08 AM

Google News

ADDED : ஆக 25, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடியில் ஒரே நாளில் ஆறு பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம் மேற்கு, நான்காவது தெருவைச் சேர்ந்த 41 வயது நபர், ஐந்து நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது 17 மற்றும் 9 வயது மகள்கள் இருவருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே பகுதியில் வசிக்கும் 30 வயது இளம் பெண் மற்றும் அவரது 2 வயது மகளும் டெங்கு வால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், ஆவடி, சேக்காடு, அண்ணா நகரில், 8 வயது சிறுவன் டெங்கு வால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்த ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், கோபாலபுரம் பகுதியில், பாழடைந்த வீட்டில், பிளாஸ்டிக் பக்கெட்டில்தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீரை கொட்டி, குப்பைகளை அகற்றி, மருந்துகள் தெளித்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us