/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி கழிவுநீர் கொட்டுவதை தடுக்க சாலையில் பள்ளம் தோண்டி நடவடிக்கை
/
லாரி கழிவுநீர் கொட்டுவதை தடுக்க சாலையில் பள்ளம் தோண்டி நடவடிக்கை
லாரி கழிவுநீர் கொட்டுவதை தடுக்க சாலையில் பள்ளம் தோண்டி நடவடிக்கை
லாரி கழிவுநீர் கொட்டுவதை தடுக்க சாலையில் பள்ளம் தோண்டி நடவடிக்கை
ADDED : செப் 16, 2024 03:10 AM

செம்மஞ்சேரி,சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜெவகர் நகர், எழில்முக நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
ஓ.எம்.ஆரில் இருந்து ஜெவகர் நகர் செல்லும் சாலையின் வடக்கு திசை, சென்னை மாவட்டம், மாநகராட்சி எல்லையில் உள்ளது. தெற்கு திசை, செங்கல்பட்டு மாவட்டம், நாவலுார் ஊராட்சி எல்லையில் உள்ளது.
தெற்கு திசையில் உள்ள தனியார் காலிமனைகள் மற்றும் அரசு இடங்களில், நள்ளிரவில் கழிவுநீர் கொட்டுப்பட்டது. இதனால், தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
அருகில் ஆழ்துளை கிணறுகள் உள்ளதால், நிலத்தடி நீர் மாசடைந்து, குடிநீர் சுகாதார சீர்கேடாக மாறியது.
பகுதிமக்கள், அத்துமீறும் லாரிகளை பிடித்து, செம்மஞ்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கழிவுநீர் விடுவதை தட்டிக்கேட்டால், பகுதிமக்களுக்கு மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, கழிவுநீர் கொட்டுவதற்காக லாரி செல்லும் பாதையில், குடிநீர் வாரியத்தினர் ஜே.சி.பி., இயந்திரத்தால் பள்ளம் தோண்டி, தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.