/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருமுடிவாக்கத்தில் அடிக்கடி நெரிசல்:தீராத பிரச்சனை
/
திருமுடிவாக்கத்தில் அடிக்கடி நெரிசல்:தீராத பிரச்சனை
திருமுடிவாக்கத்தில் அடிக்கடி நெரிசல்:தீராத பிரச்சனை
திருமுடிவாக்கத்தில் அடிக்கடி நெரிசல்:தீராத பிரச்சனை
ADDED : ஏப் 22, 2024 01:19 AM

வண்டலுார் - --மீஞ்சூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தி, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதன் சர்வீஸ் சாலை வழியே, பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில், லாரிகள் நிறுத்தம் இடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி, ஓட்டுனர்கள் ஓய்வெடுப்பர்.
இந்நிலையில், இங்கு நிறுத்தப்படும் லாரிகள் திருமுடிவாக்கத்தில், சர்வீஸ் சாலையின் எதிர் திசையில் செல்கின்றன. சர்வீல் சாலை குறுகலாக உள்ளதால் எதிரெதிரே வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
எதிர் திசையில் வரும் லாரி ஓட்டுனர்களுக்கும், அரசு பேருந்து ஓட்டுனருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. சர்வீஸ் சாலையின் எதிர் திசையில் லாரிகள் வருவதை, குன்றத்துார் போலீசார் தடை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

