/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.எஸ்.ஐ., மின் சாதனங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
/
ஐ.எஸ்.ஐ., மின் சாதனங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2024 12:38 AM
சென்னை, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஆண்டுதோறும் ஜூன், 26ம் தேதியை தேசிய மின்சார பாதுகாப்பு நாளாகவும், அன்று முதல் ஜூலை, 2ம் தேதி வரை, தேசிய மின்சார பாதுகாப்பு வாரமாகவும் அறிவித்துள்ளது.
இதை முன்னிட்டு, தமிழக மின் ஆய்வு துறை சார்பில், பொதுமக்களுக்கு மின்சார பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மின் ஆய்வாளர் விடுத்துள்ள மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்:
மின்சார 'ஒயரிங்' வேலைகளை அரசு உரிமம் பெற்ற நபர்கள் மற்றும் மின் ஒப்பந்ததாரர் வாயிலாக மட்டுமே செய்ய வேண்டும்.
ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற தரமான ஒயர் மற்றும் மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்சார, 'பிளக்கு'களை பொருத்தும் முன்பும், எடுக்கும் முன்பும், 'சுவிட்சை ஆப்' செய்யவும்.
'பிரிஜ், கிரைண்டர்' போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய மூன்று, 'பின் சாக்கெட்' உள்ள 'பிளக்' வாயிலாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
உடைந்த சுவிட்ச், பிளக்கை உடனே மாற்ற வேண்டும். கேபிள் 'டிவி' ஒயர்களை, மேல்நிலை கம்பிக்கு அருகில் எடுத்துச் செல்லக் கூடாது.
மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டக் கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது. அதன் மீது, விளம்பர பலகைகளை கட்டக் கூடாது. மழை காலங்களில் டிரான்ஸ்பார்மர், மின் பகிர்மான பெட்டி அருகில் செல்லக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

