/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய போதை நபருக்கு 'காப்பு'
/
ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய போதை நபருக்கு 'காப்பு'
ADDED : ஆக 30, 2024 12:48 AM
வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி, ஜெ.ஜெ.ஆர்.நகர், 7வது தெருவை சேர்ந்தவர் தியாகராஜன், 23; ஆட்டோ ஓட்டுனர்.
இவர் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோட்டில் உள்ள 'பெட்ரோல் பங்க்'கில், தன் ஆட்டோ மற்றும் அவரது தந்தை சூசைராஜ் ஆட்டோவிற்கு காஸ் நிரப்பியுள்ளார்.
அப்போது குடிபோதையில் அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், தியாகராஜனிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு, மர்ம நபர்கள் தியாகராஜனை கல்லால் தாக்கி விட்டு தப்பினர்.
இதில் முகத்தில் படுகாயமடைந்த அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின்படி, வியாசர்பாடி மல்லிப்பூ காலனி மெயின் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தனசேகர், 32, என்பவரை, வியாசர்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

