sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா போதையில் தகராறு இளைஞருக்கு 'காப்பு'

/

கஞ்சா போதையில் தகராறு இளைஞருக்கு 'காப்பு'

கஞ்சா போதையில் தகராறு இளைஞருக்கு 'காப்பு'

கஞ்சா போதையில் தகராறு இளைஞருக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 28, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில், கஞ்சா போதையில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம், இளைஞர்கள் இருவர் கஞ்சா போதையில், பள்ளி மாணவியரை மடக்கி பேசியுள்ளனர்.

இதை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காஞ்சா போதை இளைஞர்கள், அந்த நபரின் வீட்டின் முன் கூடி, மிரட்டி ரகளை செய்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதிவாசிகள், பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, ஒரு இளைஞர் தப்பியோடிய நிலையில், மற்றொரு இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த அருண்,19, என தெரிந்தது. இவருடன் வந்த இளைஞர் குறித்தும், இவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி எனவும், போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us