/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கம்பியில் படரும் கொடி அபாயத்தில் பள்ளி மாணவர்கள்
/
மின் கம்பியில் படரும் கொடி அபாயத்தில் பள்ளி மாணவர்கள்
மின் கம்பியில் படரும் கொடி அபாயத்தில் பள்ளி மாணவர்கள்
மின் கம்பியில் படரும் கொடி அபாயத்தில் பள்ளி மாணவர்கள்
ADDED : ஆக 20, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடம்பாக்கம் மண்டலம், 127வது வார்டு கோயம்பேடில் பள்ளிக்கூட தெரு உள்ளது. இங்கு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளன.
இதில், நடுநிலைப்பள்ளி கட்டடம் அருகே, மின்மாற்றி மற்றும் மின் கம்பி செல்கிறது. அத்துடன், அப்பகுதியில் தனியார் நிறுவன கேபிள்களும் செல்கின்றன.
மின் மாற்றி மற்றும் மின் கம்பி வழியாக செடி கொடிகள் வளர்ந்து, நடுநிலைப் பள்ளி கட்டடம் மீதும் படர்ந்துள்ளது. இதனால், பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜேந்திரன், கோயம்பேடு.

