/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகரும் படி பழுதடைந்ததால் சானடோரியத்தில் அவதி
/
நகரும் படி பழுதடைந்ததால் சானடோரியத்தில் அவதி
ADDED : ஏப் 19, 2024 12:16 AM

குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியத்தில் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட நகரும் படிகள் ஒரு மாதத்திற்கு மேல் இயங்காததால் பெண்கள், முதியோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தாம்பரம் சானடோரியத்தில், மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் உள்ளது. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள நிறுவனங்களில் பணிபுரின்றனர். இதில், சிலர் நிறுவன வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
பலர், அரசு பேருந்து மற்றும் ரயில்களில் வந்து, ஜி.எஸ்.டி., சாலையை கடந்து, நிறுவனங்களுக்கு செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக, நகரும் படிகளுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், சானடோரியத்தில் ஜி.எஸ்.டி., சாலையின் கிழக்கு பகுதியில் உள்ள நகரும் படிகள், ஒரு மாதத்திற்கு மேலாக இயங்கவில்லை. இதனால், பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நகரும் படிகளை பராமரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு முறையாக பில் வழங்காததே இதற்கு காரணம் என, கூறப்படுகிறது. பராமரிப்பில் தனியார் நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்றும், குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இவ்விஷயத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலையிட்டு, நகரும் படிகளை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

