sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விபத்தில் பலியான கல்லுாரி மாணவர்கள் 5 பேர் உடல் ஒப்படைப்பு

/

விபத்தில் பலியான கல்லுாரி மாணவர்கள் 5 பேர் உடல் ஒப்படைப்பு

விபத்தில் பலியான கல்லுாரி மாணவர்கள் 5 பேர் உடல் ஒப்படைப்பு

விபத்தில் பலியான கல்லுாரி மாணவர்கள் 5 பேர் உடல் ஒப்படைப்பு


ADDED : ஆக 13, 2024 12:57 AM

Google News

ADDED : ஆக 13, 2024 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,ஆந்திர மாநிலம், பார்த்தி கொண்டா கிராமத்தைச் சேர்ந்த ராம் மோகன், 21, திருப்பதியுகேஷ் யாதவ், 21, கடப்பா மாவட்டம் நிதிஷ், நலகொண்டா மாவட்டம் நிதிஷ் வர்மா, 19, பிரகாசம் மாவட்டம் சைதன்ய குமார், 21, நெல்லுார் மாவட்டம், விஷ்ணு வர்தன், 19 ஆகியோர், சென்னை காட்டாங்கொளத்துார் தனியார் விடுதியில் தங்கி, எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் படித்து வந்தனர்.

இவர்களுடன், திருப்பதியைச் சேர்ந்த சேத்தன், 24 என்பவரும் தங்கியிருந்தார். இவர்கள் ஏழு பேரும், மாருதி எர்டிகா காரில், கடந்த, 10ம் தேதி இரவு, திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்றனர். காரை, சேத்தன் ஓட்டினார்.

நேற்று முன்தினம், ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள காணிப்பாக்கம் கோவிலுக்குச் சென்று விட்டு, மாலையில் விடுதிக்கு காரில் புறப்பட்டனர்.

மாலை 6:40 மணியளவில், திருத்தணி - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில், ராமஞ்சேரி அருகே வந்த போது, எதிரில் வந்த ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட லாரியில் கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த சைதன்ய குமார், விஷ்ணு வர்தன் ஆகிய இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று காலை, அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இறந்த ஐந்து பேரின் உடல்கள், திருவள்ளூர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்திய பின், பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us