sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கல்குவாரியில் குளித்த மாணவர்கள் மூவர் பலி

/

கல்குவாரியில் குளித்த மாணவர்கள் மூவர் பலி

கல்குவாரியில் குளித்த மாணவர்கள் மூவர் பலி

கல்குவாரியில் குளித்த மாணவர்கள் மூவர் பலி


ADDED : மே 03, 2024 12:40 AM

Google News

ADDED : மே 03, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சி பகுதியில் கல்குவாரி குட்டை உள்ளது. இதில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க, காயார் போலீசார் மற்றும் கீரப்பாக்கம் ஊராட்சி சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு செல்வதற்கான பாதையும் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி, அங்கு குளிக்க செல்லும் கல்லுாரி மாணவர்கள், குட்டையில் மூழ்கி பலியாவது தொடர்கதையாக உள்ளது.

நேற்று முன்தினம் மாலை, பொத்தேரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர், தடையை பொருட்படுத்தாமல் குவாரி குட்டையில் குளித்துள்ளனர். அப்போது, குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்ற மூவர், கரை திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற இருவரும், அப்பகுதிவாசிகள் உதவியுடன் காயார் போலீசார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், நேற்று முன்தினம் இரவு, குட்டையில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு வரை தேடிய மீட்பு படையினர், தேடும் பணியை தள்ளிவைத்து நேற்று அதிகாலை மீண்டும் தேட ஆரம்பித்தனர். தேடுதல் பணிக்காக, சென்னையில் இருந்து நீச்சல் வீரர்கள், சிறிய படகு மற்றும் ரப்பர் ரக படகுகள் கொண்டு வரப்பட்டு, தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது.

இதில், தர்மபுரி மாவட்டம், கோபிநாத்பட்டியை சேர்ந்த விஜய்சாரதி, 19, என்ற மாணவரின் உடல், நேற்று காலை மீட்கப்பட்டது.

தொடர்ந்து, நேற்று மாலை 4:30 மணிக்கு திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த தீபக்சாரதி, 20, தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த முகமது இஸ்மாயில், 19, ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட உடல்களை, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காயார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us