ADDED : பிப் 26, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பல்லவன் இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், அரசு பேருந்தில் வந்து இருந்து இறங்கிய புதுக்கல்லுாரி மாணவர்களுக்கும், நந்தனம் கல்லுாரி மாணவர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவல்லிக்கேணி போலீசார், இரு கல்லுாரிகளையும் சேர்ந்த, ஏழு மாணவர்களை பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.