/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்கலை மாணவி வழக்கு விசாரணை கோர்ட் மாற்றம்
/
பல்கலை மாணவி வழக்கு விசாரணை கோர்ட் மாற்றம்
ADDED : பிப் 26, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கைதான ஞானசேகரன்,37, மீது சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதற்கான நகலை ஒப்படைக்க,சைதாப்பேட்டை, 9வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன் நேற்று ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார்.  முறைப்படி ஆவணங்களில் கையெழுத்திட்டு, குற்றப்பத்திரிகையை, ஞானசேகரன் பெற்றுக்கொண்டார்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை பெரியமேடு அல்லிகுளம் வளாகத்தில் செயல்படும் மகிளா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, நீதிபதி உத்தரவிட்டார்.

