/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
11 தமிழக வீரர் - வீராங்கனையர் உலக ' கிக் பாக்சிங் ' கில் பங்கேற்பு
/
11 தமிழக வீரர் - வீராங்கனையர் உலக ' கிக் பாக்சிங் ' கில் பங்கேற்பு
11 தமிழக வீரர் - வீராங்கனையர் உலக ' கிக் பாக்சிங் ' கில் பங்கேற்பு
11 தமிழக வீரர் - வீராங்கனையர் உலக ' கிக் பாக்சிங் ' கில் பங்கேற்பு
ADDED : நவ 21, 2025 05:40 AM
சென்னை: வாக்கோ இந்தியா கிக் பாக்சிங் கூட்டமைப்பு சார்பில், உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி நகரில், இன்று துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.
இதில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
இதில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், இந்திய அணியில், தலைமை பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில், 11 வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர்; இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து, அபுதாபிக்கு புறப்படுகின்றனர்.

