sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தி.மு.க., நிர்வாகி வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

/

தி.மு.க., நிர்வாகி வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

தி.மு.க., நிர்வாகி வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

தி.மு.க., நிர்வாகி வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை


ADDED : செப் 02, 2025 02:12 AM

Google News

ADDED : செப் 02, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்;சிங்கபெருமாள் கோவிலில், தி.மு.க., நிர்வாகி வீட்டில், நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், 120 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சிங்கபெருமாள் கோவில், பாரதியார் தெருவைச் சேர்ந்த ஜெயகோபால் என்பவரது மனைவி யமுனா பாய், 63. இவருக்கு சதீஷ், ரத்தீஷ் என, இரு மகன்கள் உள்ளனர். இருவரும், கே.ஆர்.சி., என்ற பெயரில், டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இதில் ரத்தீஷ், தி.மு.க., இளைஞரணி ஒன்றிய அமைப்பாளராக உள்ளார். யமுனா பாய் பழைய வீட்டில் வசித்து வரும் நிலையில், மகன்கள் இருவருக்கும் திருமணமாகி, அதே வளாகத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

தொடர் திருமண நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் யமுனா பாய், மகன் ரத்தீஷ் வீட்டில் இருந்த, 120 சவரன் நகைகளை தன் வீட்டிற்கு கொண்டு வந்து பயன்படுத்தி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், நகையை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து பூட்டி விட்டு, சதீஷ் வீட்டிற்குச் சென்று துாங்கியுள்ளார்.

நேற்று காலை 7:00 மணியளவில் வந்து பார்த்த போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 120 சவரன் தங்க நகைகள் மற்றும் உண்டியலில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

திருடு போன நகைகளின் மதிப்பு 85 லட்சம் ரூபாய்.

மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து, நான்கு தனிப்படைகள் அமைத்து, கைவரிசை காட்டிய நபர்களை தேடி வருகின்றனர்.

கைரேகை நிபுணர்கள் வந்தும் ஆய்வு செய்தனர். கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us