/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் வழக்கில் மேலும் 2 பேர் கைது
/
போதை பொருள் வழக்கில் மேலும் 2 பேர் கைது
ADDED : நவ 12, 2024 08:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ராயப்பேட்டை, மணிக்கூண்டு அருகே மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் விற்க முயன்ற, சேலம் குறுக்குப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த துணை நடிகை மீனா, 27, என்பவரை, நவ, 10ம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம், தீவிர விசாரணை நடத்தினர். இதில், சூளை கலத்தியப்பா தெருவைச் சேர்ந்த பவான், 29, கர்நாடகா மாநிலம் கூர்க் மாவட்டத்தைச் சேர்ந்த டிசான் ஜோசப், 27, ஆகிய இருவரும் உடந்தையாக செயல்பட்டது தெரிந்தது.
நேற்று இருவரையும், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

