/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
330 அடி நீளம், 155 அடி அகலத்தில் கார்கில் நகரில் பிரமாண்ட குளம்
/
330 அடி நீளம், 155 அடி அகலத்தில் கார்கில் நகரில் பிரமாண்ட குளம்
330 அடி நீளம், 155 அடி அகலத்தில் கார்கில் நகரில் பிரமாண்ட குளம்
330 அடி நீளம், 155 அடி அகலத்தில் கார்கில் நகரில் பிரமாண்ட குளம்
ADDED : நவ 14, 2024 02:38 AM

திருவொற்றியூர்:திருவொற்றியூர் மேற்கு, அம்பேத்கர் நகர், ராஜாசண்முகம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சேகரமாகும் மழைநீர், வடிகால்கள் வழியாக, கார்கில் நகர் கழிவெளி நிலத்தை வந்தடையும்.
இங்கு தேங்கும் மழைநீர், பிரதான கால்வாய் வழியாக, பகிங்ஹாம் கால்வாய்க்கு கடத்தப்பட்டு, கடலுக்கு செல்லும்படி அமைப்பு உள்ளது.
இந்நிலையில், சமனற்ற நிலையில் இருக்கும் கழிவெளி நிலத்தில், குளம் அமைக்கும் பணி, சில மாதங்களாக நடந்து வருகிறது.
அதன்படி, 330 அடி நீளம், 155 அடி அகலம், சாலை மட்டத்தில் இருந்து, 11.5 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், மின் மோட்டர் அறை அமையவிருக்கும் இடத்தில், தெருக்களின் மழைநீர் வடிகால்களில் இருந்து, 7 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, தண்ணீர் உறிஞ்சும் அளவிற்கு, கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, குடியிருப்புகள், தெருக்களில் தேங்கும் மழைநீரானது, வடிகால் வழியாக கழிவெளி நிலத்தில் அமையவிருக்கும் குளத்தில் வந்து தேங்கி, மின்மோட்டர்கள் வழியாக, பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடத்தப்படும்.
இதன் மூலம், குளத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்; நிலத்தடி நீர் மட்டமும் உயர்வில் இருக்கும்.
இந்நிலையில், கழிவெளி நிலத்தில் குளம் அமைக்கும் பணியை, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

