sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சீரமைத்த சாலையில் மீண்டும் 5 அடி ஆழத்தில் பள்ளம்

/

சீரமைத்த சாலையில் மீண்டும் 5 அடி ஆழத்தில் பள்ளம்

சீரமைத்த சாலையில் மீண்டும் 5 அடி ஆழத்தில் பள்ளம்

சீரமைத்த சாலையில் மீண்டும் 5 அடி ஆழத்தில் பள்ளம்


ADDED : அக் 25, 2024 12:22 AM

Google News

ADDED : அக் 25, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளசரவாக்கம்,

வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டில், பாதாள சாக்கடை பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த வார்டில் சின்ன போரூர், மருத்துவமனை சாலை உள்ளது.

இந்த மருத்துவமனை சாலையின் கீழ் 25 அடி ஆழத்தில் பாதாள சாக்கடை குழாய் செல்கிறது.

கடந்த ஆண்டு பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் மண் கொட்டி சீர் செய்யப்பட்ட போது, குடிநீர் குழாய் உடைந்து, மீண்டும் பள்ளம் ஏற்பட்டது.

ஓராண்டாக நடந்த பணிகளுக்கு பின், பள்ளம் சீர் செய்யப்பட்டது. இந்நிலையில், அதே இடத்தில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் மண் சரிந்து 5 அடி ஆழத்திற்கு 10 அடி அகலத்திற்கு,திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளம் சாலையோரம் உள்ள குடியிருப்பை ஒட்டி விழுந்ததால், குடியிருப்பு வாசிகள் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.

அத்துடன், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மருத்துவமனை சாலையில் மீண்டும் மீண்டும் பள்ளம் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேபோல், 151வது வார்டு, அண்ணா சாலை மற்றும் திரவியம் நகர் முதல் தெரு சந்திப்பில், ஏற்கனவே சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்ட இடத்தில், மீண்டும் சாலை உள்வாங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us