/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடையில் தவறவிட்ட 5 சவரன் உரிமையாளரிடம் ஒப்படைப்பு
/
கடையில் தவறவிட்ட 5 சவரன் உரிமையாளரிடம் ஒப்படைப்பு
ADDED : நவ 03, 2025 02:22 AM

சென்னை: ஜெராக்ஸ் கடையில் தவறவிட்ட, 5 சவரன் நகையை கடைக்காரர், போலீசார் உதவியுடன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
ஐஸ்ஹவுஸ், வி.ஆர்.பிள்ளை தெருவில் வேல்முருகன் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 23ம் தேதி, அவரது கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வந்த நபர், 5 சவரன் நகையை தவறவிட்டுச் சென்றுவிட்டார். நகையை எடுத்த கடைக்காரர், அவற்றை ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நகையின் உரிமையாளர் குறித்து விசாரித்து வந்தனர்.
கலைவாணன் என்பவர், தன் மனைவியை பிரசவத்துக்காக கஸ்துாரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது, கழுத்திலிருந்த தாலி செயினை கழற்றி கொடுத்தார். அதை, ஜெராக்ஸ் எடுக்கும்போது தவறவிட்டதும், திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்ததும் தெரியவந்தது.
கலைவாணனின் மனைவி ரஞ்சனியை அழைத்த போலீசார், அவரிடம், 5 சவரன் செயினை ஒப்படைத்தனர். ஜெராக்ஸ் கடைக்காரர் வேல்முருகனின் நேர்மையை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

